Paristamil Navigation Paristamil advert login

ChatGPT தொழிநுட்பத்தை பயன்படுத்தி… லட்சங்களில் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

ChatGPT தொழிநுட்பத்தை பயன்படுத்தி… லட்சங்களில் சம்பாதிக்கும் அமெரிக்க எழுத்தாளர்

29 வைகாசி 2023 திங்கள் 11:26 | பார்வைகள் : 6542


அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து அசத்தியுள்ளார்.
 
OpenAi  என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலை நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என பல்வேறு துறையினருக்கும் கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரமாக பார்க்கப்படுகிறது.
 
இவை மனித குலத்திற்கு தீங்கு ஏற்படுத்தலாம் என்ற பாதுகாப்பு உணர்வு நம்மில் பலருக்கு எழுந்தாலும், தற்போது இந்த Chat GPT தொழில்நுட்பம் நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது.
 
இந்த ChatGPT-யின் உதவி கொண்டு விதவிதமான புதிய யோசனைகளை பலர் உருவாக்கி வருகின்றனர்.
 
சிலர் இந்த தொழில்நுட்பத்தை வைத்து பணம் சம்பாதிக்கவும் தொடங்கி விட்டனர்.
 
அமெரிக்காவை சேர்ந்த டிம் பவுச்சர் என்ற எழுத்தாளர் பல ஆண்டுகளாக புனை கதைகள் எழுதி அதை புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து, அதை பயன்படுத்தி டிம் பவுச்சர் நூற்றுக்கணக்கான கதைகளை எழுதி அதனை புத்தகங்களாக அச்சடித்து விற்பனை செய்துள்ளார்.
 
இந்த புத்தகங்கள் தற்போது இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஒரு நாளைக்கு 500 புத்தகங்கள் வரை விற்பனை ஆவதுடன் சுமார் 2000 அமெரிக்க டாலர்களை இதன் மூலம் சம்பாதிக்க தொடங்கியுள்ளார்.
 
இவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது புத்தகங்களின் ஆங்காங்கே புகைப்படங்களையும் இடம்பெற செய்துள்ளார்.  
 
டிம் பவுச்சர் தன்னுடைய புத்தகங்களை எழுதுவதற்காக Chat GPT உடன் Anthropic's claude என்கிற Chatbot-யும் பயன்படுத்தி வருகிறார் .
 
இவரை போலவே தற்போது பலரும் Chat GPT தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புத்தகங்களை எழுத தொடங்கியுள்ளனர், அத்துடன் அவற்றின் மூலம் வருமானமும் ஈட்டத் தொடங்கியுள்ளனர். 
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்