Paristamil Navigation Paristamil advert login

மொபைல் ஆப்களைப் பயன்படுபவர்களின் கவனத்திற்கு!

மொபைல் ஆப்களைப் பயன்படுபவர்களின் கவனத்திற்கு!

3 பங்குனி 2017 வெள்ளி 13:51 | பார்வைகள் : 8290


 நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் நமது பல்வேறு பயன்களுக்காக பல மொபைல் ஆப்கள் உள்ளன. .

 
ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து மொபைல் ஆப்ஸ்களும் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்று பார்த்தால் அது கேள்விக்குறியே,
 
இந்த மொபைல் ஆப்ஸகள் மூலமாக நாம் சமூக வலைத்தளங்களை உபயோகிப்பதும், ஷொப்பிங் செய்வதும் அதிகரித்து வருகிறது.
 
சில மொபைல் ஆப்ஷ்களின் மூலம் ஷொப்பிங் செய்கையில், நமது பெயர் உட்பட முகவரிகளை கொடுப்பதால், நமது தரவுகள் திருடப்படுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
 
எனவே, மொபைல் ஆப்ஸ்களை பயன்படுத்தும் சில விதிமுறைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

Private policy
 
சில ’ஆப்’களை பதிவிறக்கம் செய்யும்போது அவற்றில் சில நமது Photo, contact களைப் பதிவு செய்யக்கோரும்.
 
நாம் பதிவு செய்யும் தகவல்கள் எவ்வாறு உபயோகிக்கப்படும், பகிரப்படுமா என Private policy-யை படித்து தெரிந்து கொண்ட பின்னரே உபயோகிக்க வேண்டும்.

Additional security/authentication layers
 
ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போது அதில் login credentials எனும் நம் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வோம்.
 
அந்த தகவல்களை யார் யார் பார்க்கலாம், கூடுதல் பாதுகாப்பு உள்ளதா என அறிந்து கொண்டு உபயோகிக்கலாம்.
 
Critical information

மொபைல் ஆப் மூலம் ஷொப்பிங் செய்யும் போது அதில் Account Number. password ஆகியவற்றை பதிவு செய்வதை போதுமான வரை தவித்துக்கொண்டால், நமது வங்கி கணக்குகளைப் பாதுகாக்கலாம்.
 
Unique user id and password
 
அனைத்து ஆப்ஸ்களிலும் வெவ்வேறு Password பயன்படுத்துவதன் மூலம் Hacker கள் நமது தகவல்களை திருடுவதை தடுக்கலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்