அதிகம் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் ஆபத்து!

1 தை 2015 வியாழன் 15:15 | பார்வைகள் : 13374
சமூக வலையத்தளமான பேஸ்புக் இன்று வயது வேறுபாடு இன்றி அனைவரையும் தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றது.
இவ்வாறு நீண்ட நேரம் பேஸ்புக் பாவிப்பவர்களுக்கு சித்தப் பிரம்மை மற்றும் ஞாபக சக்தி கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோதத்துவ நிபுணரான Richard Sherry தெரிவிக்கையில், இதற்கு பிரதானமாக பேஸ்புக்கில் போலிக் கணக்குகள் காணப்படுவதே காரணம் எனவும், இவற்றினை அலசி ஆராய்வதில் பெருமளவான நேரங்களை செலவு செய்யப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.