பாரிஸ் Porte de la Chapelle பகுதியில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

10 புரட்டாசி 2023 ஞாயிறு 18:03 | பார்வைகள் : 15536
பாரிஸ் தலைநகரில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் A1 நெடுஞ்சாலைக்கு அண்மித்த பகுதியான Porte de la Chapelle பகுதியிலேயே இந்த கொலைச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.
போதைக்கு அடிமையான இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கையில் "கொலை செய்யப்பட நபர் தகராறில் இருந்து தப்பித்து ஓட முற்பட்ட வேளையில் கொலைக்கு காரணமான நபர் அவரை இரும்பு கம்பியால் தலையில் அடித்தே கொலை செய்தார் " என le parisien பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளனர்.
தகராறில் ஈடுபட்ட இருவரும் சோமாலியா நாட்டைச் சேர்ந்த அகதிகள் என தெரியவருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1