Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் மாயமான மாணவி - பொலிஸார் விடுத்த கோரிக்கை

கிளிநொச்சியில் மாயமான மாணவி - பொலிஸார் விடுத்த கோரிக்கை

13 புரட்டாசி 2023 புதன் 14:50 | பார்வைகள் : 4152


கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் காணாமல் போயுள்ள மாணவி ஒருவரை கண்டறிய பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். 
 
இந்த மாணவியை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
18 வயதுடைய புவனேஷ்வரன் ஹனி என்ற மாணவியே காணாமல் போயுள்ளார். 
 
மேலதிக வகுப்பிற்காக சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 
 
சிறுமி காணாமல் போன தினத்தன்று அவர் மேலதிக வகுப்பிற்கும் சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாணவி தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
 
எனினும் இதுவரை குறித்த சிறுமி கண்டறியப்படாமையினால் பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்