சீமான் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி

16 புரட்டாசி 2023 சனி 08:00 | பார்வைகள் : 11920
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.
சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெற்றார். வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை என குறிப்பிட்டார். சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கூறினார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025