யாழில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்ப உத்தரவு!

14 புரட்டாசி 2023 வியாழன் 13:14 | பார்வைகள் : 8370
சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட "கானுலா" உரிய முறையில் பொருத்தப்படாததால் , சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், மத்திய சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் , சிறுமியின் பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை (13) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் மன்றுக்கு அறிவித்தனர்.
அதனையடுத்து , துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை பொலிஸார் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு , அது தொடர்பிலான அறிக்கையை பெறுமாறு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு திகதியிட்டு ஒத்திவைத்தது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1