Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் பயங்கர விபத்து! 6 பேர் பலி!

சீனாவில் பயங்கர விபத்து! 6 பேர் பலி!

15 புரட்டாசி 2023 வெள்ளி 10:42 | பார்வைகள் : 4870


சீனாவில் ராட்சத டவர் கிரேன் சரிந்து விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி  6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சீனா - ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

வழக்கம்போல் நேற்றைய தினம் இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தவேளை ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.

இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்