Paristamil Navigation Paristamil advert login

கணவரை கொன்றுவிட்டு குழந்தையுடன் தப்பிச் சென்ற மனைவி!!

கணவரை கொன்றுவிட்டு குழந்தையுடன் தப்பிச் சென்ற மனைவி!!

18 புரட்டாசி 2023 திங்கள் 14:02 | பார்வைகள் : 9865


கணவரைக் கத்தியால் குத்தி கொன்ற பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

Dunkerque நகரில் இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. 51 வயதுடைய நபர் ஒருவரை அவரது மனைவி கத்தியால் குத்தியுள்ளார். உறங்கிக்கொண்டிருந்த அவர் இந்த திடீர்த் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். 

அதன் பின்னர் தனது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

கொல்லப்பட்ட நபரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தப்பி ஓடிய அவரது மனைவி தேடப்பட்டு வருகிறார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்