90 வயது மூதாட்டி படுகொலை - மகன் கைது!!

17 புரட்டாசி 2023 ஞாயிறு 17:30 | பார்வைகள் : 11871
துலூஸ் நகரில் 90 வயதுடைய மூதாட்டி கத்திக்குத்துகளிற்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இவரது 59 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்ச்சியாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ச்சியான விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
வேண்டுமென்றே குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தமை என்ற ரீதியிலேயே இவரது மகன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஆனாலும் காவற்துறையினரிடம் எந்த ஆதாரங்களோ அல்லது வாக்குமூலங்களோ இதுவரை கிடைக்கவில்லை.
மேலதிக விசாரணைகள் உடற்கூற்றுப் பகுப்பாய்வின் பின்னரே தொடர முடியும் எனக் காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இவரைக் காவலில் வைப்பதற்கும் நீதிமன்ற உத்தரவு பெறப்படல் வேண்டும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1