நடைபாதையில் பயணித்த உந்துருளி - இரு காவல்துறையினர் காயம்!!

18 புரட்டாசி 2023 திங்கள் 07:00 | பார்வைகள் : 11174
பாதசாரிகளுக்கான நடைபாதையில் பயணித்த உந்துருளி ஒன்றினை தடுத்து நிறுத்த முற்பட்ட இரு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.
Agen (Lot-et-Garonne) நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 21 வயதுடைய இளைஞன் ஒருவன் மாலை 4 மணி அளவில் அங்குள்ள நடை பாதை ஒன்றில் உந்துருளி (moto) அதிவேகமாக பயணித்துள்ளான். காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அழைக்கப்பட்டனர்.
குறித்த இளைஞனை தடுத்து நிறுத்த முற்பட்டும் அவன் உந்துருளியை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளான்.
அதையடுத்து இளைஞனை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவன் மீது பாய்ந்து மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர்.
உந்துருளி காவல்துறை வீரர் ஒருவரை தூக்கி வீசியுள்ளது. இரண்டாவது அதிகாரிக்கு இலேசான காயங்களும் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உந்துருளியை ஓட்டிச் சென்ற இளைஞன் கைது செய்யப்பட்டான்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1