Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் ஜனாதிபதி சர்கோஷிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் - கொலை மிரட்டல்

முன்னாள் ஜனாதிபதி சர்கோஷிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் - கொலை மிரட்டல்

21 புரட்டாசி 2023 வியாழன் 09:16 | பார்வைகள் : 4852


முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷிக்கும் அவரது மகனுக்கும் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் தொடர்பாக அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிக்கோலா சர்கோஷியின் சகோதரி Caroline Sarkozy இன் வீட்டுக்கு தொலைபேசியூடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அவரை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், ‘நிக்கோலா சர்கோஷி மற்றும் அவரது மகன் Jean Sarkozy ஆகிய இருவரையும் விரைவில் கொலை செய்வேன். இருவரும் இறப்பார்கள்!’ என மிரட்டல் விடுத்துள்ளார். 

இச்சம்பவத்தை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தனிநபர் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் படைப்பிரிவான brigade de répression de la délinquance contre la personne (BRDP) அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிக்கோலா சர்கோஷி கடந்த 2007 ஆம் ஆண்டில் 2012 ஆம் ஆண்டு வரை பிரான்சின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்