Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பாடசாலைக்குள் தஞ்சம் புகுந்த அகதிகள்

பரிஸ் : பாடசாலைக்குள் தஞ்சம் புகுந்த அகதிகள்

23 புரட்டாசி 2023 சனி 17:35 | பார்வைகள் : 5316


பரிசில் உள்ள பாடசாலை வளாகம் ஒன்றுக்குள் அகதிகள் சிலர் குடியேறியுள்ளனர். அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். 

7 ஆம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வார செவ்வாய்க்கிழமை மாலை அவர்கள் குடியேறியுள்ளனர். மொத்தமாக 25 அகதிகள் அங்கு குடியேறியதாகவும், பகல் இரவுகளில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் வட்டார நகரபிதா Rachida Dati இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ஆரோக்கியமற்ற முறையில் அகதிகள் அங்கு தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். 

Guinea நாட்டைச் சேர்ந்த அகதிகளே அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்