Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி

இலங்கையில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி

24 புரட்டாசி 2023 ஞாயிறு 06:50 | பார்வைகள் : 3847


நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் சனிக்கிழமை இரவு கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விஜித்தபுர மார்காஸ்தோட்ட பிரதேசத்தில் தனது வீட்டில் வைத்து கணவன் மனைவிக்கிடையே சனிக்கிழமை இரவு வழக்கம்போல் 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

தொடர்ந்து கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரம் அடைந்த மனைவி கத்தி கொண்டு தாக்கியுள்ளார்.

இதனால் கத்திக் குத்துக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இலக்கம் 28பி விஜிதபுர பகுதியை சேர்ந்த பஹிதரன் சந்திரசேகரன் என்ற 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் அதே இடத்தில் வைக்கப்பட்டு நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளதுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளது.

பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான மனைவி பாத்திமா ரிஸ்வானாவை கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்