Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு! 3 பேர் பலி

அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு!  3 பேர் பலி

24 புரட்டாசி 2023 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 2647


அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு!  3 பேர் பல்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகத்திற்கு 3 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மற்ற 2 பேரை நோக்கி சுட்டுள்ளார்.

இதனால் அவர்கள் இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

இதனை பார்த்த அந்த தெருவில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடிய நிலையில் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் உடனடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒருவருக்கு 20 வயதும், மற்றொருவருக்கு 30 வயதும் ஆகும்.

எனினும் அவர்களை பற்றிய அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. துப்பாக்கி சூட்டுக்கான பின்னணி பற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்