Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகும் ஜஸ்பிரித் பும்ரா 

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகும் ஜஸ்பிரித் பும்ரா 

24 புரட்டாசி 2023 ஞாயிறு 09:02 | பார்வைகள் : 1983


அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

மொகாலியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து 2வது ஒருநாள் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி விளையாடுவதற்காக இந்தூர் சென்ற இந்திய அணியுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பயணம் செய்யவில்லை என்று பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

தன்னுடைய குடும்பத்தை சந்திப்பதற்காக பும்ரா சென்று இருப்பதாகவும், இதற்காக இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து சிறிது ஓய்வு எடுத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அத்துடன் ராஜ்கோட்டில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் பும்ரா மீண்டும் இந்திய அணியுடன் இணைந்து விடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்