Paristamil Navigation Paristamil advert login

யாழில் பெருந்தொகை நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு

யாழில் பெருந்தொகை நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் திருட்டு

27 புரட்டாசி 2023 புதன் 14:25 | பார்வைகள் : 3011


யாழில்  வீட்டினுள் நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகை மற்றும் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.

பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை, மதியம் பாடசாலையில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர சென்ற சமயம், வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 13 பவுண் தங்க நகைகளையும், ஒரு தொகை வெளிநாட்டு காசுகளையும் திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்