Paristamil Navigation Paristamil advert login

வடிவேலுவால் மேடையில் கண் கலங்கிய இயக்குனர்!

வடிவேலுவால் மேடையில் கண் கலங்கிய இயக்குனர்!

27 புரட்டாசி 2023 புதன் 15:51 | பார்வைகள் : 3205


 2015 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளிவந்த எலி என்ற படத்தை இயக்கியவர் தான் யுவராஜ் தயாளன். இதற்கு முன்னதாக அவர் போடா போடி, தெனாலிராமன் ஆகிய படங்களையும் இயக்கி இருந்தார். ஆனால் எலி அவருக்கு பெரும் சரிவை கொடுத்து விட்டது.

எப்படி என்றால் அப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியின் போது இயக்குனரும் வடிவேலுவும் விமர்சனத்திற்காக காத்திருந்தார்களாம். ஆனால் படம் முடிந்து சில நிமிடங்கள் ஆன பிறகும் கூட அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித கருத்தும் வராமல் அமைதியே பதிலாக கிடைத்திருக்கிறது.

பொதுவாக ஒரு படம் நம்மை உணர்ச்சி பூர்வமாக கவர்ந்து விட்டாலோ அல்லது நல்லா இல்லை என்றாலோ தான் இது போன்ற மயான அமைதி இருக்கும். அதில் எலி இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்பதை இயக்குனர் படம் பார்த்தவர்களின் முகத்தை வைத்தே கணித்து விட்டாராம்.

அதைத் தொடர்ந்து வடிவேலுவுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது நடுவழியிலேயே இறங்கி கால் போன போக்கில் சென்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் வெளியான ஒரு வருடம் கழித்தும் கூட அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரவில்லையாம். அந்த அளவுக்கு அவர் சினிமாவையே வெறுத்து இருக்கிறார்.

தற்போது அந்த வேதனையிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இறுகப்பற்று படத்தை இயக்கி முடித்துள்ளார். அதன் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்த போது மேற்கண்ட விஷயங்களை கூறிய இயக்குனர் இந்த படத்திற்கு ஆதரவு அளிக்கும் படி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். அந்த வகையில் வடிவேலுவால் சினிமாவை வெறுத்த இவருக்கு இந்த படம் வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்