Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் நுழைந்து வன்முறை கும்பல் அட்டகாசம்

கிளிநொச்சியில் வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் நுழைந்து வன்முறை கும்பல் அட்டகாசம்

28 புரட்டாசி 2023 வியாழன் 02:05 | பார்வைகள் : 3209


கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு குடியிருப்புக்குள் குழுவொன்று புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஐவர் காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
 சிறு கொடுக்கல் வாங்கல் தாக்குதல் நடத்துமளவிற்கு வழியமைதுள்ளது.

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை குறித்த குழு தாக்கியது. சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

குறித்த இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் வெட்டியதாகவும், தடுத்த பெண்ணுக்கும் தாக்கியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இளைஞர் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து, நள்ளிரவு 20க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் நுழைந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன், முதியவர்களான கணவன் மனைவி இருவருக்கும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் CCTV கமெராக்கள், மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி அழித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கி பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பெற்றோல் குண்டும் தயாரித்து வீசப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் வெட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வருகை தந்துள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்