Paristamil Navigation Paristamil advert login

உலக நாடுகளுக்கு காத்திருக்கும் பேராபத்து... அதிர்ச்சி தகவல்

உலக நாடுகளுக்கு காத்திருக்கும் பேராபத்து... அதிர்ச்சி தகவல்

28 புரட்டாசி 2023 வியாழன் 07:53 | பார்வைகள் : 3265


 சீனாவில் கொரோனா போன்ற மற்றொரு கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார்.

வௌவால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்,

40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.

இத்தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது.

பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் நிபுணர்கள்  தெரிவித்து உள்ளனர்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்