Paristamil Navigation Paristamil advert login

ஸ்பெயின் நகரில் இளம்பெண்களுக்கு நேர்ந்த கதி...!

 ஸ்பெயின் நகரில் இளம்பெண்களுக்கு நேர்ந்த கதி...!

26 புரட்டாசி 2023 செவ்வாய் 09:18 | பார்வைகள் : 4552


ஸ்பெயினின் நகரமொன்றில் வசிக்கும் இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளது.

முழுமையாக ஆடையணிந்த யுவதிகள் சிறுமிகளின் படங்களை அவர்களின் சமூக ஊடகங்களில் இருந்து எடுத்து, பின்னர் அவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை மாற்றியுள்ளனர்.

ஸ்பெயினின் அல்மென்டிரலெஜோ நகரத்தை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 11 முதல் 17 வயது வரையிலான 20 பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையிலிருந்து வந்த எனது மகள் தனது படம் மேலாடையின்றி சமூக ஊடகங்களில் காணப்படுகின்றது என தெரிவித்தார் என 14 வயது சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.  

பாதிக்கப்பட்ட 28 யுவதிகளின் பெற்றோர் நீதி கோரி குழுவொன்றை அமைத்துள்ளனர் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இவ்வாறான படங்களை உருவாக்கி சமூகஊடகங்களில் பதிவிட்டதில் 11 மாணவர்களிற்கு தொடர்புள்ளமை தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மாணவியை போலி படத்தை காண்பித்துஅவரிடமிருந்து பணம் பறிக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டு குறித்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான படங்கள் வெளியானமை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிலர் அதனை சுலபமாக எடுத்துக்கொண்டுள்ளனர் சிலர் மோசமான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என 14 வயது சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

30,000 பேரை கொண்ட அந்த ஒலிவ் மற்றும் ரெட்வைனிற்கு பிரபலமானது  தற்போது தேசிய செய்திகளில் தலைப்பில் இடம்பெறும் அளவிற்கு அந்த நகரம் மாறியுள்ளது.

எத்தனை பிள்ளைகளின் படங்கள் உள்ளன அவை ஆபாச பட இணையத்தளங்களில் வெளியாகியுள்ளனவா என அச்சப்படுகின்றோம் என மகப்பேறு மருத்துவரான மிரியம் அல் அடிப் தெரிவித்துள்ளார்.

மேலும்  அந்த மருத்துவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆறுதல் அளிக்கும் விடயத்தை வெளியிட்ட பின்னரே இந்த விடயம் பலருக்கு தெரியவந்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்