இலங்கையின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

30 புரட்டாசி 2023 சனி 14:14 | பார்வைகள் : 7536
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுகங்கையை அண்மித்த சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கலவெள்ளாவ பகுதியில் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில், வெள்ளப்பெருக்கு எற்படக்கூடும் என நீர்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், களுகங்கையின் நீர்மட்டம் புடுபாவுல பகுதியிலும் நில்வளகங்கையின் நீர்மட்டம் தல்கஹாகொட பகுதியிலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025