Paristamil Navigation Paristamil advert login

AI தொழில்நுட்பத்திற்காக அணுசக்தி விஞ்ஞானிகளை பணியமர்த்தும் மைக்ரோசாப்ட்! 

AI தொழில்நுட்பத்திற்காக அணுசக்தி விஞ்ஞானிகளை பணியமர்த்தும் மைக்ரோசாப்ட்! 

1 ஐப்பசி 2023 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 1856


AI தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அணுசக்தி விஞ்ஞானிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியமர்த்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் சாட் ஜிபிடி மாதிரிகளை இயக்க அணுசக்தியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அணு விஞ்ஞானிகளை பணியமர்த்தும் பணியில் அந்நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

பெரிய அணு உலைகளுக்குப் பதிலாக சிறிய உலைகளை நம்பியிருப்பதுதான் இந்நிறுவனத்தின் குறிக்கோள். இது AI மாடல்களை இயக்குவதற்கான செலவைக் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

AI மாதிரிகள் செயல்பட அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. Chat GPT தொடர்பான சர்வர் செயல்பாடுகளுக்கு ஒரு நாளைக்கு $7,00,000 வரை செலவாகும்.

AI தொடர்பான கணினி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 550 டன்களுக்கு மேல் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படலாம். மேலும் இதற்கு 3.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம்.

கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் ஒரு பகுதியாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் அதன் தரவு மைய செயல்பாடுகளை மையப்படுத்த மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அணுசக்தியை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்தது.

மைக்ரோசாப்ட், Chat GPTயின் டெவலப்பர்களான OpenAI உடன் 10 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்