Paristamil Navigation Paristamil advert login

ஸ்பெயின் பாடசாலையில்  மாணவனின் வெறிச் செயல்...

ஸ்பெயின் பாடசாலையில்  மாணவனின் வெறிச் செயல்...

29 புரட்டாசி 2023 வெள்ளி 07:29 | பார்வைகள் : 4016


ஸ்பெயினில் பாடசாலையில்  14 வயது சிறுவனொருவன் சக மாணவர்களையும், ஆசிரியர்களையும் கத்தியால் குத்தி கொடூரச் செயலில் ஈடுப்பட்டுள்ளார்.

28.09.2023 இல் தனது பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை எடுத்த குறித்த சிறுவன் அங்கிருந்த ஆசிரியரை விரட்டிச் சென்று அவரது கண்ணில் குத்தியுள்ளான்.

இதன் போது அவனைத் தடுக்க முயன்ற பிற ஆசிரியர்களையும், மாணவர்களையும் அச்சிறுவன் கத்தியால் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் 3 ஆசிரியர்களும் 2 மாணவர்களும் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை தாக்குதல் நடத்திய சிறுவனைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்