Paristamil Navigation Paristamil advert login

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல

முதுமை இயலாமையின் அடையாளம் அல்ல

4 ஐப்பசி 2023 புதன் 04:31 | பார்வைகள் : 2771


சர்­வ­தேச முதியோர் தினத்தை முன்­னிட்டு இக்­கட்­டு­ரையை எழுத அமர்ந்­த­போது சீனு ராம­சா­மியின் இந்த வரி­கள்தான் நினை­வுக்கு வந்­தன. நம்மில் பெரும்­பா­லா­னோரின் பால்ய காலம் என்­பது நம்­மு­டைய தாத்­தாக்கள், பாட்­டி­களால் நிரம்­பி­யவை தான். ஆனால் நம்மில் பெரும்­பா­லானோர் பால்­யத்தைக் கடக்­கும்­போது தாத்தா, பாட்­டி­க­ளையும் கடந்­து­வி­டு­கிறோம். அவர்­களின் அறி­வு­ரைகள் காலத்­துக்குப் பொருந்­தா­த­வை­யாகத் தோன்ற ஆரம்­பிக்­கின்­றன. நிற்க அவ­கா­ச­மின்றிச் சுழலும் காலச்­சக்­க­ரத்தில் அவர்­க­ளுடன் செல­விடும் நேரம் அநா­வ­சி­ய­மா­ன­தா­கி­வி­டு­கி­றது. ஆனால் நம்­மு­டைய பால்­யத்தை அழ­காக்­கி­ய­வர்கள் கால­வோட்­டத்தில் முதுமை எய்­தும்­போது அவர்­களை சுமை­யா­கக்­க­ருதித் தூர­நி­றுத்­து­வது ஏற்­பு­டை­யதா? ஒரு­கா­லத்தில் முதுமை நம்­மையும் அணுகும் அல்­லவா? என்ற கேள்­வியை ஒரு­முறை நம்மை நாமே கேட்­டுப்­பார்த்­துக்­கொள்வோம். அந்தக் கேள்­வியே வயது முதிர்ந்­த­வர்­களின் தேவை­க­ளையும், அவர்கள் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னை­க­ளையும், அவற்­றுக்­கான தீர்­வு­க­ளையும் கண்­ட­டை­வ­தற்­கான தேடலை நம்முள் விதைக்கும்.

ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது 60 வய­துக்கு மேற்­பட்­டோரை முதி­யோ­ராக வரை­ய­றுக்கும் அதே­வேளை, உல­கப்­பொ­ரு­ளா­தாரம் 64 வயதை பிறரை சார்ந்து தங்­கி­வாழும் வய­தெல்­லை­யாக நிர்­ண­யித்­தி­ருக்­கி­றது. எது­எவ்­வா­றி­ருப்­பினும் இலங்­கையில் 60 வயதே ஓய்­வு­பெறும் வய­தெல்­லை­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஐக்­கிய நாடுகள் சபை­யினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட புள்­ளி­வி­பர இணை­யத்­த­ள­மான 'வேல்­டோ­மீற்றர்'  (Worldo meter) இன் தர­வு­களின் பிர­காரம் 2022 ஜுனில் இலங்­கையின் சனத்­தொகை 21,586,581 ஆக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதே­வேளை 2021 ஒக்­டோ­பரில் உலக வங்­கி­யினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யின்­படி இலங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் 12.3 சத­வீ­த­மானோர் 60 வய­துக்கு மேற்­பட்­டோ­ராக, அதா­வது முதி­ய­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

அது­மாத்­தி­ர­மன்றி தெற்­கா­சி­யாவில் அதிக முதி­ய­வர்­க­ளைக்­கொண்ட நாடாக இலங்கை இருப்­ப­தாக அவ்­வ­றிக்கை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. முதி­ய­வர்­களின் எண்­ணிக்கை உயர்­வாகக் காணப்­ப­டுதல் என்­பது மனித அபி­வி­ருத்திச் சுட்­டெ­ண்ணின்­படி 76 ஆவது இடத்­தி­லுள்ள இலங்கை முகங்­கொ­டுத்­தி­ருக்கும் முக்­கிய சவா­லாகும். ஏனெனில் முன்னர் 65 ஆகக் காணப்­பட்ட ஓய்­வு­பெறும் வய­தெல்லை பின்னர் 60 ஆகக் குறைக்­கப்­பட்­ட­மையும், நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்குப் பங்­க­ளிப்­புச்­செய்­யக்­கூ­டிய நிலை­யி­லுள்ள முதி­ய­வர்­க­ளுக்கு ஏற்­ற­வா­றான கட்­ட­மைப்­பையும், வாய்ப்­புக்­க­ளையும் உரு­வாக்­கு­வ­தற்கு அர­சாங்கம் தவ­றி­யி­ருப்­பதும் நாட்டில் தங்­கி­வாழ்­வோரின் எண்­ணிக்கை அதி­க­ரிப்­ப­தற்கு வழி­கோ­லி­யி­ருப்­ப­துடன், இது உழைக்கும் மக்கள் மீதான நிதிசார் அழுத்­தத்தின் அளவை அதி­க­ரித்­துள்­ளது.

இலங்­கையில் 33.95 வரு­டங்கள் என்­பது அனைத்துப் பிர­ஜை­களும் உயிர்­வாழும் சரா­சரி வய­தாகக் கணிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­துடன், பெண்­களின் ஆயுட்­காலம் சரா­ச­ரி­யாக 80.4 வரு­டங்­க­ளா­கவும், ஆண்­களின் ஆயுட்­காலம் சரா­ச­ரி­யாக 73.8 வரு­டங்­க­ளா­கவும் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே 60 வயதில் ஓய்­வு­பெறும் முதி­ய­வர்­களில் பெரும்­பான்­மை­யானோர் சுமார் 10 – 20 ஆண்­டுகள் மிகக்­க­டி­ன­மா­ன­தொரு வாழ்க்­கையை வாழ­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர். அதிலும் இலங்கை போன்ற நாடு­களில் திரு­ம­ணத்­தின்­போது பெண்ணின் வயது ஆணின் வயதை விடவும் குறை­வாக இருப்­ப­தனால், பெண்கள் முது­மை­ய­டை­யும்­போது துணை­யின்றி நீண்­ட காலம் வாழ­வேண்­டிய நிர்­பந்­தத்­துக்கு உள்­ளா­கின்­றனர்.

இலங்­கையைத் தள­மாகக் கொண்­டி­யங்­கி­ வரும் சமூக அக்­கறை மையத்­தினால்  (Centre for Social Concerns) அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட 'வயது முதிர்ந்த பெண்­களின் நிலைமை தொடர்­பான ஆய்வு' (Assessment of the status of Older Women) அறிக்­கையில், 'இலங்­கையின் மொத்த சனத்­தொ­கையில் வயது முதிர்ந்­தோரின் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரித்­து­ வ­ரு­கின்ற போதிலும், அதனை உரி­ய­வாறு கையாள்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­ள­வி­லான ஆயத்­தங்­க­ளையே மேற்­கொண்­டி­ருக்­கின்­றது' எனச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அது­மாத்­தி­ர­மன்றி, 'இலங்கைச் சமூ­கத்தில் முதி­யோரை மதிக்கும் கலா­சாரம் இருப்­ப­தாகக் கூறப்­பட்­டாலும், பால்­நிலை, உடற்­திறன், இனம், சாதி, குடும்­ப­நிலை, பொரு­ளா­தா­ர­நிலை போன்ற ஏனைய கார­ணி­க­ளுடன் வயது அடிப்­ப­டை­யிலும் பாகு­பாடு காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அத்­தோடு 30 வரு­ட ­கால யுத்தம், கொவிட் - 19 பெருந்­தொற்று, அண்­மைய பொரு­ளா­தார நெருக்­கடி என்­பன நாட்டின் வறுமை நிலையை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­துடன், வறி­ய­வர்­க­ளாக இருக்கும் வயது முதிர்ந்தோர் மீது நேர­டித்­தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது' என்றும் அந்த ஆய்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் கிரா­மிய, நகர்ப்­புற, பெருந்­தோட்ட, மீன்­பிடி மற்றும் விவ­சாயப் பிர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய 10 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து தெரி­வு­செய்­யப்­பட்ட வயது முதிர்ந்த 299 பெண்கள் மற்றும் வயது முதிர்ந்த 52 ஆண்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு சமூக அக்­கறை மையத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு முடி­வு­க­ளின்­படி 51.9 சத­வீ­த­மானோர் பிள்­ளை­க­ளு­டனும், 38.5 சத­வீ­த­மானோர் வாழ்க்­கைத்­து­ணை­யு­டனும், 7.7 சத­வீ­த­மானோர் தனி­யா­கவும், 1.9 சத­வீ­த­மானோர் உற­வி­னர்­க­ளு­டனும் வாழ்­கின்­றனர்.

அதே­போன்று அவர்­களில் 60 – 69 வய­துக்கு இடைப்­பட்­டோரில் (இரு­பா­லாரும்) 116 பேரும், 70 -– 79 வய­துக்கு இடைப்­பட்­டோரில் 77 பேரும், 80 வய­துக்கு மேற்­பட்­டோரில் 20 பேரும் தற்­போதும் தொழில்­பு­ரி­வதன் மூலம் வரு­மானம் உழைக்­கின்­றனர். மேலும் 60 - 69 வய­துக்கு இடைப்­பட்­டோரில் (இரு­பா­லாரும்) 91 பேரும், 70 – 79 வய­துக்கு இடைப்­பட்­டோரில் 63 பேரும், 80 வய­துக்கு மேற்பட்­டோரில் 18 பேரும் சுய­தொ­ழிலில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

எனவே நாட­ளா­விய ரீதியில் தெரி­வு­செய்­யப்­பட்ட வயது முதிர்ந்த 351 பேரை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்­வின் முடி­வுகள் பெரும்­பான்­மை­யான முதி­யோர்கள் ஏதே­னு­மொரு தொழிலில் ஈடு­ப­டு­வ­தையும் தாம் தங்­கி­வாழும் வீட்­டுக்கும் நாட்­டுக்கும் பொரு­ளா­தார ரீதியில் பங்­க­ளிப்­புச்­செய்­வ­தையும் காண்­பிக்­கின்­றது. எனவே ஓய்­வு­பெறும் வய­தெல்­லையைக் குறைப்­ப­தற்குப் பதி­லாக வயது முதிர்ந்­தோ­­ருக்கு ஏற்­ற­வா­றான மிகை அழுத்­த­மற்ற வேலை­வாய்ப்­புக்­களை விரி­வு­ப­டுத்­து­வதன் மூலமும், அவர்­க­ளுக்கு அவ­சி­ய­மான வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பதன் மூலமும் நாட்டின் பொரு­ளா­தாரம் நன்­மை­ய­டையும் அதே­வேளை, தனி­மையின் விளை­வாக முதி­ய­வர்கள் முகங்­கொ­டுக்கும் உள­வியல் சிக்­கல்­க­ளையும் ஓர­ள­வுக்கு சுமு­க­மாகக் கையாள முடியும்.

இருப்­பினும் முது­மையில் தவிர்க்­க­மு­டி­யா­மல் முகங்­கொ­டுக்­க­ நேரும் நோய்­நி­லை­மை­கள் முதி­ய­வர்­க­ளுக்கும், அவர்­களை சார்ந்­தோ­­ருக்கும், சுகா­தா­ரத்­து­றைக்­கான மிகை­யான செல­வி­னத்­தின் விளை­­வாக நாட்டின் பொரு­ளா­­தா­ரத்­துக்கும் முக்­கிய சவா­லாகக் காணப்­ப­டு­கின்­றன. உயர் இரத்த அழுத்தம், நீரி­ழிவு, கண்­புரை, பல் பிரச்­சி­னைகள், மூச்­சுத்­தி­ணறல், மூட்­டு­வாதம், சிறு­நீ­ர­கநோய், புற்­றுநோய், இரு­த­யநோய் போன்­றன பெரும்­பான்­மை­யான முதி­யோரைத் தாக்கும் நோய்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எனவே முதி­யோ­ருக்­கான சுகா­தா­ர­சேவைக் கிடைப்­ப­னவை இல­கு­ப­டுத்­து­வதன் மூலமும், அதில் சீரான தன்­மையைப் பேணு­வதன் மூலமும் இந்­நோய்­நி­லை­மை­களின் தீவி­ரத்­தன்­மையைக் குறைத்­துக்­கொள்­ளலாம். அது­மாத்­தி­ர­மன்றி முதி­ய­வர்கள் மத்­தி­யி­லான நோய்­நி­லை­மையைக் குணப்­ப­டுத்­துதல்   மற்றும் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருத்தல் ஆகி­ய­வற்றின் ஊடாக சுகா­தா­ரத்­துறை மீதான சுமை­யையும் பகு­தி­ய­ளவில் குறைத்­துக்­கொள்­ள­மு­டியும்.

 இவற்­றுக்கு மேல­தி­க­மாக முதி­யோர்­க­ளுக்­­கான கட்­ட­மைப்­புக்­களின் செயற்­தி­றனை மேம்­ப­டுத்தல், முதி­யோர்­க­ளுக்­கான நட­மாடும் சுகா­தா­ர­சேவை வச­தி­களை ஏற்­ப­டுத்தல், முதி­ய­வர்கள் சமூ­கத்­துடன் ஊடா­டு­வ­தற்கு அவ­சி­ய­மான வச­தி­களை விரி­வு­ப­டுத்தல் (உதா­ர­ண­மாக வயது முதிர்ந்தோர் சுமு­க­மான முறையில் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வா­றான போக்­கு­வ­ரத்து சேவை), முது­மையில் ஏற்­ப­டத்­தக்க நோய்­நி­லை­மைகள் தொடர்பில் குடும்ப மற்றும் சமூக மட்­டத்தில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தல், முதி­யோ­ருக்­கான நிலை­யான வாழ்­வா­தா­ரத்தை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வா­றான நிதி­யு­தவி செயற்­திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தல், தங்கிவாழ்வோர் தொடர்பான கொள்கை வழிகாட்டல்களைத் தயாரித்தல், தொழில்வாய்ப்புக்களில் வயது அடிப்படையிலான பாகுபாட்டை நீக்கல், முதியோருக்கு ஏற்றவாறான வேலை­வாய்ப்புக்களை உருவாக்கல், மூப்­படைதல் தொடர்பில் சமூகத்தின் மத்தி­யில் நேர்மறையான சிந்தனையைக் கட்டி­யெழுப்பல் போன்ற நடவடிக்கைகளை தத்­தமது வகிபாகத்துக்கு அமைவாக அரசாங்கம், நிதிக்கட்டமைப்புக்கள், தனியார் துறையினர், ஊடகங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதன் மூலம் நாட்டிலுள்ள முதி­யோர் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்யவும், அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் உச்ச பயனடையவும் முடியுமென சமூக அக்கறை மையம் சுட்டிக்­காட்டுகின்றது.

ஆக, முதுமை என்பது இயலாமையோ அல்­லது சுமையோ அல்ல. மாறாக அது மனித­னாகப் பிறந்த அனைவரினதும் வாழ்வில் ஓரங்கம். எனவே முதுமையை இயலா­மை­யின் அடையாளமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை மாற்றியமைக்கும் பொறுப்பு தனிமனிதனில் தொடங்கி அர­சாங்கம் வரையிலான நாட்டின் சகல கட்டமைப்புக்களுக்கும் உண்டு. நேர்மறை­யைக் காணும் சிந்தனையோட்டமே ஆரோக்கியமான மாற்றத்தின் திறவுகோல்! 

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்