Paristamil Navigation Paristamil advert login

உணவுக்கு வழியில்லை மருத்துவப் கல்வியை நிறுத்தும் 37% சதவீத மாணவர்கள். மருத்துவ மாணவர்களின் தேசிய சங்கம்.

உணவுக்கு வழியில்லை மருத்துவப் கல்வியை நிறுத்தும் 37% சதவீத மாணவர்கள். மருத்துவ மாணவர்களின் தேசிய சங்கம்.

4 ஐப்பசி 2023 புதன் 14:36 | பார்வைகள் : 3390


பிரான்சில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் 37% சதவீத மருத்துவதுறை மாணவர்களும், 42% சதவீத தாதியர் துறை மாணவர்களும் தங்கள் கல்வியை இடைநிறுத்துவது, தமக்கு கவலையளிப்பதாக, மருத்துவ மாணவர்களின் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் கல்வியின் இரண்டாவது சுழற்சியில் நுழையும் மாணவர்களுக்கு 4,400 யூரோக்களுக்கு மேல் 2023 ஆண்டில் தேவைப்படுகிறது, இது 2022 கல்வியாண்டுடன் ஒப்பிடும்போது 8.15% சதவீதம் அதிகரித்துள்ளது என சங்கம் மதிப்பிடு செய்துள்ளது.

Anemf இன் கூற்றுப்படி, இரண்டு மருத்துவ மாணவர்களில் ஒருவர் ஏற்கனவே இந்த ஆண்டில் 48% சதவீ அதிக பணத்தை வங்கிக் கடனாகப் பெற்றுள்ளனர், மேலும் இது அதிகரித்து  54% ஆக உயர்கிறது. "52% சதவீத மருத்துவ மாணவர்கள் தாங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக கருதுகின்றனர்" மேலும் "45% மட்டுமே தங்களுடைய மாதாந்த தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இருப்பதாக கருதுகின்றனர்.

இந்த நிதி சிக்கல்களால் 55% மாணவர்கள் சாப்பிடுவதற்கு போதுமானதாக பணம் இல்லாத நிலையில் உள்ளனர். இது முந்தைய கணக்கெடுப்பின் திகதியான 2019 உடன் ஒப்பிடும்போது 12 புள்ளிகள் அதிகரித்துள்ளது. 41% பேர் நிதிக் காரணங்களுக்காக மாதத்திற்கு ஒருமுறையாவது உணவைத் தவிர்க்கிறார்கள். இதனுடன் வீட்டுவசதி சேர்க்கப்பட்டுள்ளது: "29% பேர் தங்கள் வாடகையைச் செலுத்துவதில் சிரமப்படுகிறார்கள். இந்த நிலையில் தான் மருத்துவத் துறை மாணவர்கள் தங்கள் கல்வியை இடை நிறுத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்