Paristamil Navigation Paristamil advert login

 ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்... 1000ஐ கடந்த பலி எண்ணிக்கை

 ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்... 1000ஐ கடந்த பலி எண்ணிக்கை

8 ஐப்பசி 2123 வெள்ளி 07:23 | பார்வைகள் : 3223


மேற்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மேற்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

இது அண்டை நாடுகளான பட்கிஸ் மற்றும் ஃபரா மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளதாக புவியியல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஹெராத் நகரில் இருந்து 40 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.

மேலும் எட்டு முறை நிலநடுக்கம் தொடர்ந்தன. நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்தன.

ஹெராத் மாகாணத்தில் சுமார் 600 வீடுகள் அழிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 4200 பேர் வீடிழந்தனர்.

ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஹெராட்டில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்