Paristamil Navigation Paristamil advert login

பொய் குற்றச்சாட்டுகள் மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பொய் குற்றச்சாட்டுகள் மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

9 ஐப்பசி 2023 திங்கள் 15:48 | பார்வைகள் : 2092


பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு புகாரில் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டவும், அடிபணிய வைக்கவும் முயற்சி நடக்கிறது. 

இதில் அரசியல்வாதி மட்டுமல்லாமல், தொழிலதிபர்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பயம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது. 

இது நாட்டிற்கு நல்லது அல்ல. 

மதுபான கொள்கை தொடர்பான சஞ்சய் சிங் தொடர்பான புகார்கள், வாக்குமூலங்கள் அனைத்தும் பொய். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்