Paristamil Navigation Paristamil advert login

கோல்டன் ஸ்டாருக்காக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் போர்... வென்றது யார்?

 கோல்டன் ஸ்டாருக்காக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் போர்... வென்றது யார்?

10 ஐப்பசி 2023 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 2393


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பல்வேறு புது விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அதில் ஒன்று தான் கோல்டு ஸ்டார். இந்த கோல்டு ஸ்டாருக்கான டாஸ்க் வார வாரம் நடக்கும். இதில் வென்று அதிக கோல்டு ஸ்டார்களை கைவசம் வைத்துள்ள நபர்கள் அதன்மூலம் எலிமினேஷனில் இருந்து ஒருமுறை தப்பிக்க முடியும்.

அந்த வகையில் கடந்த வாரம் நடந்த கோல்டு ஸ்டார் டாஸ்கில் சரவண விக்ரம் வெற்றி பெற்றார். இதையடுத்து இந்த வாரத்திற்கான கோல்டு ஸ்டார் டாஸ்க் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும்மற்ற ஹவுஸ்மேட்ஸை விட எந்த விதத்தில் மக்களை எண்டர்ட்டெயின் பண்ணிருக்கிறார்கள் என்பதை சொல்லி விவாதிக்க வேண்டுமாம்.

அதன்படி ஒவ்வொரு போட்டியாளராக வந்து தங்களைப் பற்றி பேசி உள்ளனர். முதலில் வரும் மாயா, இந்த நிகழ்ச்சியில் தான் அதிகமாக கிசுகிசு பேசி உள்ளதாக கூறி உள்ளார். இதையடுத்து விஷ்ணு, பூர்ணிமா, விஜய் வர்மா, ஐஷூ, யுகேந்திரன் என ஒவ்வொரு போட்டியாளராக வந்து வாதிட, இறுதியாக ஜோவிகா தன் வாதத்தை முன் வைக்கிறார்.

அப்போது சீரியஸ் ஆன விஷயத்திலும் நான் இருந்திருக்கேன், காமெடியான விஷயத்திலும் நான் இருந்திருக்கேன் என ஜோவிகா சொன்னதும், வேண்டுமென்றே சில விஷயங்களை பேசுறியா என அவரிடம் விசித்ரா கேள்வி எழுப்பும் காட்சிகளும் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதனால் இன்றைய எபிசோடும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்