Paristamil Navigation Paristamil advert login

அதிகமாக தேநீர் குடித்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரியுமா?

அதிகமாக தேநீர் குடித்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரியுமா?

13 ஐப்பசி 2023 வெள்ளி 15:09 | பார்வைகள் : 1941


 நீங்கள் அதிகமாக தேநீர் குடிக்கும் போது  தூக்கம் இருக்காது. இதனால் எப்போதும் சோம்பலான முகத்தை நீங்கள் பெறுவீர்கள். தேநீரில் இருக்கும் காபின், உடலில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவை அதிகரிக்க பயன்படுத்தும் டையூரிடிக் மருந்தாக செயல்படுகிறது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தேநீர் அருந்தும் போது சிறுநீர் அடிக்கடி வெளியேறும். இதனால் உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதனால் உங்களது தோல் வறண்டு விடுவதோடு சருமத்தில் சுருக்கங்களும் ஏற்படும்.

ஒரு நாளைக்கு நீங்கள் அதிகளவு தேநீர் அருந்தும் போது, அது உங்கள் உடலின் ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கிறது. இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் உங்களின் சரும துளைகளை அடைத்து முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. தேநீரில் உள்ள காஃபின் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சேர்ந்து உடலின் கொலாஜன் செயலிழப்பை உண்டாக்குகிறது. இதை அதிகமாக உட்கொள்ளும் போது இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. குறிப்பாக தோல் தொய்வு மற்றும் சுருக்கம் ஏற்படுகிறது.

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் நம்மில் பலர் டீயைக் குடிப்போம். சில நேரங்களில் நண்பர்களை சந்திக்கும் போது இரவு நேரங்களில் தேநீர்  அருந்தும் போது இதில் உள்ள காஃபின் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. முறையான தூக்கமின்மை உங்களுக்கு கண்களுக்கு கீழே கருவளையங்களை ஏற்படுத்தும். மேலும் சோர்வாகவும், வயதானவராகவும் உங்களை உணரவைக்கும்.

தற்போது பெரும்பாலான கடைகளில் இஞ்சி, ஏலக்காய் தேநீரை  தயார் செய்கின்றனர். நறுமணம் மற்றும் சுவைக்காக இதை சேர்ந்தாலும் இந்த மசாலாப் பொருட்கள் சிலருக்கு வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அழற்சி ஏற்படுவதோடு சருமம் சிவந்தும் போய்விடும். நீங்கள் குடிக்கும் தேநீரில்  உங்களுக்குப் பிடிக்காத பொருள்கள் சேரும் போது ஒவ்வாமை ஏற்படும். சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக நீங்கள் தேநீரை அருந்தும் போது சருமத்தில் அரிப்பு போன்ற தோல் அழற்சி ஏற்படக்கூடும்.

சூடான தேநீரை நீங்கள் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, உங்களுக்கு நாள்பட்ட தோல் நோயான ரோசாசியா பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு மூக்கு மற்றும் கன்னம் சிவப்பாக மாறக்கூடும். சில சமயங்களில் அரிப்பும் உங்களுக்கு ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக டீ அருந்துவதால் சில நேரங்களில் தோல் புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படும் என்கிறது ஆய்வுகள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்