Paristamil Navigation Paristamil advert login

நாங்கள் சாதித்ததை நாடே பேசுகிறது : நிதிஷ் குமார் பெருமிதம்

நாங்கள் சாதித்ததை நாடே பேசுகிறது : நிதிஷ் குமார் பெருமிதம்

11 ஐப்பசி 2023 புதன் 22:52 | பார்வைகள் : 2801


நாங்கள் என்ன சாதித்தோம் என்பது குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. அடுத்த கட்டமாக, குடும்பங்களின் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளோம் என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டது.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, நிதிஷ் குமார் அளித்த பதில்: நாங்கள் என்ன சாதித்தோம் என்பது குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இப்போது, அடுத்த கட்டமாக, குடும்பங்களின் பொருளாதார நிலை குறித்து விவரங்களைப் சேகரித்துள்ளோம். இது அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என பதில் அளித்தார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்