Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine : மொராக்கோவின் முன்னாள் பிரதமரின் வீட்டில் கொள்ளை!

Hauts-de-Seine : மொராக்கோவின் முன்னாள் பிரதமரின் வீட்டில் கொள்ளை!

12 ஐப்பசி 2023 வியாழன் 16:02 | பார்வைகள் : 3808


மொராக்கோவின் முன்னாள் பிரதமரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். 

மொராக்கோவின் முன்னாள் பிரதமர் Abdellatif Filali இன் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி Fontenay-aux-Roses (Hauts-de-Seine) நகரில் வசித்து வருகிறார். 80 வயதை நெருங்கும் அவரின் மனைவியின் வீட்டுக்குள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள், அப்பெண்மணியை கட்டிவைத்து அவரிடம் இருந்த உடமைகளைத் திருடியுள்ளார். 

மொத்தமாக 300,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.  கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

Abdellatif Filali கடந்த 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 1998 ஆம் ஆண்டு வரை மொராக்கோவின் பிரதமராக இருந்தவர். அவர் தனது ஓய்வு காலத்தின் பின்னர் Hauts-de-Seine மாவட்டத்துக்கு குடியேறினார். அதன்பின்னர்   2009 ஆம் ஆண்டு அவர்  உயிரிழந்திருந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்