Paristamil Navigation Paristamil advert login

இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

15 ஐப்பசி 2023 ஞாயிறு 13:32 | பார்வைகள் : 2431


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவிற்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்