Paristamil Navigation Paristamil advert login

காசாவுக்கு குடிநீர் வழங்க தயாராகும் இஸ்ரேல் 

 காசாவுக்கு குடிநீர் வழங்க தயாராகும் இஸ்ரேல் 

16 ஐப்பசி 2023 திங்கள் 08:23 | பார்வைகள் : 3275


இஸ்ரேயல் - காசா பகுதிகளில் போர் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 2,329 பலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளது.

9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் திடீர் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்