Paristamil Navigation Paristamil advert login

கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் எடுத்த விபரீத முடிவால் மரணம்

கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் எடுத்த விபரீத முடிவால் மரணம்

16 ஐப்பசி 2023 திங்கள் 16:16 | பார்வைகள் : 2642


கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

 எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இன்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுரேஸ்குமார் தனிகை  வயது 17 லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார்  சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர். 

அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும்
வருகின்றனர்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்