Paristamil Navigation Paristamil advert login

ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு சிசு மரணம்

ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு சிசு மரணம்

18 ஐப்பசி 2023 புதன் 13:27 | பார்வைகள் : 3397


காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது.

குறித்த குழந்தை பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்தநிலையில் குழந்தையின் நுரையீரலில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் இந்த தம்பதியினர் 12 வருட காலாமாக குழந்தை இல்லாத நிலையில் சிகிச்சைகளைப் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த பெண்ணின் கருப்பையில் 6 கருக்களை இணைத்து செயற்கை முறையிலான கருத்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, 26 வாரங்களில் பிரசவ வேதனை ஏற்பட்ட நிலையில், இந்த ஆறு குழந்தைகளும் அவசர சிசேரியன் முறை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் எடை 400 முதல் 700 கிராம் வரையாக உள்ளதாக வைத்திய நிபுணர் சமன் குமார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே ஒரு சிசு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்