துபாயில் பாரிய வெடி விபத்து.. மூன்று பேர் கவலைக்கிடம்
19 ஐப்பசி 2023 வியாழன் 07:47 | பார்வைகள் : 8423
துபாயில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரி புன்னோலைச் சேர்ந்த நிதின் தாஸ், ஷனில் மற்றும் நஹீல் ஆகியோர் பலத்த காயங்களுடன் துபாய் ரஷீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிதின் தாஸின் காயங்கள் மிகவும் மோசமாக உள்ளன.
நேற்று இரவு 12.20 மணியளவில் கராமா 'டே டு டே' ஷாப்பிங் சென்டருக்கு அருகில் உள்ள பின்ஹைடர் கட்டிடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. வாயு கசிந்து வெடித்தது.
அந்த குடியிருப்பில் மூன்று அறைகளில் 17 பேர் வசித்து வந்தனர். இந்த வெடிவிபத்தின் தாக்கத்தில் அருகில் உள்ள குடியிருப்பில் இருந்த 2 பெண்களும் காயமடைந்தனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan