Paristamil Navigation Paristamil advert login

பேராசிரியர் Dominique Bernard அவர்களுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது.

பேராசிரியர் Dominique Bernard அவர்களுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது.

19 ஐப்பசி 2023 வியாழன் 08:50 | பார்வைகள் : 3336


கடந்த வெள்ளிக்கிழமை Arras நகரில் உள்ள Lycée Gambetta உயர்நிலைப் பள்ளியில,  20 வயது பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Dominique Bernard அவர்களின் இறுதிச்சடங்கு இன்று (19/10/2023) காலை பத்து மணிக்கு நடைபெறுகிறது.

Arras நகரின் பேராலயத்தில் நடைபெறும் இறுதித் திருப்பலியில் அதிபர் d'Emmanuel Macron, பிரான்சின் முதல் பெண்மணி Brigitte Macron மற்றும் தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட 57 வயது பேராசிரியர்   Dominique Bernard அவர்களின் பேராசிரியர் பணியை பாராட்டி பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருதான "chevalier de la Légion d'honneur" எனும் விருது இன்று அவருக்கு வழங்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்