Paristamil Navigation Paristamil advert login

யாழில் பொலிஸ் வேடத்தில் அத்துமீறி நுழைந்து கொள்ளை

யாழில் பொலிஸ் வேடத்தில் அத்துமீறி நுழைந்து கொள்ளை

19 ஐப்பசி 2023 வியாழன் 12:24 | பார்வைகள் : 3071


யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ,  தங்களை பொலிஸார் என்று அறிமுகப்படுத்தி 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் புதன்கிழமை (18)  கைது செய்யப்பட்டுள்ளனர். 

கந்தர்மடம் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நால்வர் சென்று தம்மை பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

பின்னர் கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக  தகவல் கிடைத்துள்ளது என கூறி,  கடைக்குள் அத்துமீறி நுழைந்த தேடுதல் நடத்தி கடையில் இருந்த 23 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு, கடையிலிருந்தவர்களை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடை உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பொலிஸார் , இருவரைக் கைது செய்துள்ளதுடன்  மேலும் இருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்