Paristamil Navigation Paristamil advert login

அல் நஸர் அணிக்கு புதிய வீரர்களை பதிவு செய்ய தடை

அல் நஸர் அணிக்கு புதிய வீரர்களை பதிவு செய்ய தடை

13 ஆடி 2023 வியாழன் 05:04 | பார்வைகள் : 3260


கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி, கடந்த 2018ஆம் ஆண்டில் Leicester City அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது.

ஆனால் அவருக்கான ஒப்பந்தத் தொகை 18 மில்லியன் டொலர்களை செலுத்த அல் நஸர் தவறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து FIFA 2021ஆம் ஆண்டில் பணத்தை செலுத்தாவிட்டால் அல் நஸர் பதிவுத் தடையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தது.

இந்த நிலையில், இந்த கோடையில் எந்த புதிய வீரர்களையும் தங்கள் அணியில் சேர்க்க அல் நஸருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது மூன்று தொடர்ச்சியான பரிமாற்ற சாளரங்களுக்கு நீடிக்கும் என்றும் பிபா கூறியது.

ஆனால், தடையை நீக்கும் பொருட்டு அல் நஸர் கட்டணம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் PIF (Public Investment Fund) தெளிவுபடுத்தியுள்ளது.

அகமது முசா அல் நஸர் அணிக்காக 2018-20 ஆண்டுகளில் 9 கோல்கள் அடித்துள்ளார்.

தற்போது இவர் Sivasspor அணியில் விளையாடி வருகிறார்.

நைஜீரியாவைச் சேர்ந்த முசா தனது தேசிய அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்