Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் இருந்து இதுவரை 89 பேர் வெளியேற்றம்!!

பிரான்சில் இருந்து இதுவரை 89 பேர் வெளியேற்றம்!!

21 ஐப்பசி 2023 சனி 12:44 | பார்வைகள் : 5639


தீவிர மதவாதம் கொண்ட 89 பேர் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். 

பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இஸ்லாமிய மதம் தொடர்பாக அடிப்படைவாதம் கொண்டு செயற்பட்டு வரும் 89 பேர் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஒக்டோபர் 16, Arras நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் அவசர எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கைது சம்பவங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்