இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு

21 ஐப்பசி 2023 சனி 15:19 | பார்வைகள் : 7302
அஹுங்கல்ல, உரகஹா வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே அவர்கள் இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டியொன்றில் பிரவேசித்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.