Paristamil Navigation Paristamil advert login

யாழ் வைத்தியசாலையில் மதுபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய இருவர்!

யாழ் வைத்தியசாலையில் மதுபோதையில் குழப்பத்தை ஏற்படுத்திய இருவர்!

25 ஐப்பசி 2023 புதன் 13:26 | பார்வைகள் : 5619


யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் மதுபோதையில் நுழைந்தவர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நோயாளர் ஒருவரை பார்வையிடுவதற்கு சென்றிருந்த இருவரே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளரினால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்