Paristamil Navigation Paristamil advert login

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட மாற்றம்

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட மாற்றம்

23 ஐப்பசி 2023 திங்கள் 13:51 | பார்வைகள் : 2613


யாழில் 33 வருடங்களின் பின் ஆலயம் ஒன்று புதுப் பொழிவு பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறும்.

மறுநாள் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெற்று தொடர்ந்து அபிஷேக பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. 

குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும் , அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறி சென்ற நிலையில் , ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன கும்பாபிசேஷகம் இடம்பெறவுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்