Paristamil Navigation Paristamil advert login

இறால் பிரியாணி

இறால் பிரியாணி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10235


 தேவையான  பொருள்கள்

 
இறால் - அரை கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
மல்லித் தழை, புதினா - ஒரு கைப்பிடி
உப்பு  - தேவயான அளவு 
 
 
இறால்  ஊற வைக்க:
 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - கால்  ஸ்பூன்
உப்பு  மஞ்சள் தூள் - சிறிது
 
தாளிக்க:
 
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 3
பிரியாணி இலை - ஒன்று
அன்னாசிப்பூ - பாதி
எண்ணெய் - தேவையான அளவு
 
 
செய்முறை 
 
முதலில்  இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை  சேர்த்து 1 மணி நேரம்  ஊற வைக்க  வேண்டும். 
 
அரிசியை  20 நிமிடம் ஊற வைக்கவும். . பச்சை மிளகாய் . வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி  வைக்கவும். 
 
குக்கரில்   எண்ணெய் விட்டு காய்ந்ததும்  தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 
 
வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் 
 
வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.  பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.  தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும். 
 
பின் 2 கப் அரிசிக்கு  3 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் தண்ணீர் நன்க கொதித்ததும் அரிசியை நன்கு வடித்து போடவும்.  
 
அதனுடன் தேவையான அளவு உப்பு  சிநிதளவு நெய்  சிறிது புதினா  சேர்த்து நன்கு கிளரி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி விசில் போட்டு  அடுப்பை சிம்மில் வைத்து 10 நிம்டம் கழித்து இறக்கவும். 
 
இறக்கி 10 நிமிடம் கழித்து நன்கு கிளரி பரிமாறவும் சுவையான  இறால் பிரியாணி   ரெடி. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்