Paristamil Navigation Paristamil advert login

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவரா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவரா?

28 ஐப்பசி 2023 சனி 14:54 | பார்வைகள் : 2137


பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார். அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

முதலாவதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து  பவா செல்லதுரை தாமாக முன்வந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கூறி வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த வாரம் விஜய் வீட்டிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது வீட்டில் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வார கேப்டனாக பூர்ணிமா தேர்வாகியுள்ள நிலையில், அவரை பெரிதும் கவராதவர்கள் என்ற அடிப்படையில் பிரதீப், நிக்ஸன், மணி, யுகேந்திரன், அனன்யா, ஜோவிகா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்‌ஷனுக்காக பிரதீப், ஜோவிகா, கூல் சுரேஷ், மணி, மாயா, விஷ்ணு, வினுஷா, அக்‌ஷயா, நிக்ஸன், மகேந்திரன், விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அனுஷா வெளியேற்றப்படுவார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்