Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கை சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

28 ஐப்பசி 2023 சனி 16:02 | பார்வைகள் : 2688


சிகிரியாவில் துருக்கிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கி அவரது பணப் பையைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க இரண்டு சிறுவர்கள் பொலிஸாருக்கு உதவியுள்ளனர்.

சிகிரியாவுக்கு விஜயம் செய்த குறித்த சுற்றுலாப் பயணி, மோட்டார் சைக்கிளில் குறுக்கு வீதியொன்றின் ஊடாக தனது தங்குமிடத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்களை எதிர்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் சுற்றுலாப் பயணியைத் தாக்கி பணப் பையைப் பறித்துச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதை அவதானித்த அப்பகுதியிலுள்ள இரண்டு சிறு பிள்ளைகள் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தைக் குறித்துக் கொண்டு பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து குழந்தைகள் அறிந்ததும், சுற்றுலாப் பயணி தங்கியிருந்த விடுதியின் உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிள் எண்ணைத் தெரிவித்ததால், அது பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சீகிரிய பொலிஸார் சந்தேக நபர்களை 45 நிமிடங்களுக்குள் கண்காணித்து சுற்றுலா பயணிகளின் திருடப்பட்ட 225 அமெரிக்க டொலர்கள் மற்றும் இலங்கை ரூபா 20,000 பணத்துடன் சந்தேகநபர்கள் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் காயமடைந்த துருக்கி சுற்றுலா பயணி சீகிரிய பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்