இலங்கை பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

26 ஐப்பசி 2023 வியாழன் 10:32 | பார்வைகள் : 7974
அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டு இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.