Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான பொது அஞ்சலி! - ஜனாதிபதி ஏற்பாடு!

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான பொது அஞ்சலி! - ஜனாதிபதி ஏற்பாடு!

26 ஐப்பசி 2023 வியாழன் 18:13 | பார்வைகள் : 3456


ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் இஸ்ரேலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான பொது அஞ்சலி நிகழ்வை  ஜனாதிபதி மக்ரோன் ஏற்பாடு செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்தில் இந்த பொது அஞ்சலி கூட்டம் இடம்பெறும் என அறிய முடிகிறது. திகதி மற்றும் இடம்பெறும் இடம் ஆகியவை இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனவும் அறிய முடிகிறது.

"அடுத்த வாரத்தில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வை மக்ரோன் அறிவிப்பார்!" என இன்று வியாழக்கிழமை மாலை எலிசே (Elysée) மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 31 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டதாக நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்