Paristamil Navigation Paristamil advert login

சம்பந்தன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்?

சம்பந்தன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல்?

29 ஐப்பசி 2023 ஞாயிறு 11:33 | பார்வைகள் : 2272


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயாவின் அரசியல் அனுபவம் தொடர்பில் அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதுடன் நீண்ட அனுபவசாலி என்றே பலரும் கூறுவார்கள்.

அவரது தெளிவான பார்வையும் அரசியல் அனுபவமும் எப்போதும் தேவையானது. ஆனால், வயது மூப்பின் காரணமாக அவரால் முன்னரைப் போன்று செயற்பட முடியவில்லை.

குறிப்பாக அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அந்த மக்கள் தங்கள் பிரதிநிதி தொடர்பில் தேடுகின்றதுடன் தங்களுக்காக ஒருவர் களத்தில் இருக்கவேண்டும் என்று கோரியிருக்கின்ற நிலைமை உள்ளது.

இவ்வாறான நிலைமையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு தெரவித்திருந்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்திருந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்